Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தக்கலை அருகே கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி தக்கலை: தக்கலை அருகே உள்ள ஒரு கல்லூரி முன்பாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் ஆலப்புழா, காயங்குளம் பகுதியை சேர்ந்த உதிஸ் (வயது 23), திருவனந்தபுரம், வர்க்கலை பகுதியை சேர்ந்த அல் அபின் (20) என்பதும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய 120 கிராம் கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செயதனர். அப்போது இருவரும் தக்கலை அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது.